என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயி தூக்குபோட்டு தற்கொலை"
- நோயாளி அவசர சிகிச்சை பிரிவு மாடியில் உள்ள ஆபரேசன் தியேட்டர் முன்பு உள்ள கதவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வரு கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் மையப்பகுதியில் அமைந்து ள்ளது மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி. இங்கு நகர் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் சிலர் இங்கு தங்கி உள்நோயாளி களாக உள்ளனர்.
அவர்களுக்கு உதவியாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இருப்பதால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு கலிக்கம்பட்டியை சேர்ந்த வர் ேசசுராஜ்(55). விவசாயி யான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்துவிட்டது.
இதனைதொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்ப ட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை அவசர சிகிச்சை பிரிவு மாடியில் உள்ள ஆபரேசன் தியேட்டர் முன்பு உள்ள கதவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சேசுராஜ் பிணமாக தொங்குவதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேசு ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வரு கின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு ஆஸ்ப த்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்